சென்னை: மூத்த குடிமக்களுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டம் நிறுத்தப்படாது என்று உணவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் அறிவுறுத்தல் படி 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள் ஆகியோருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் வகையில் திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
