×

பெரியார் சிலை மூடியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, மார்ச் 11: திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையை நகராட்சி நிர்வாகத்தினர் தேர்தலை முன்னிட்டு மூடி வைத்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின்போது, பெரியார் எந்தக் கட்சியையும் சாராதவர் என்பதால், அவரது சிலையை மூட வேண்டிய அவசியமில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது திருச்செங்கோடு நகராட்சி சார்பில், பெரியார் சிலையை மூடி வைத்துள்ளனர். இதையடுத்து, பெரியார் சிலையை மூடியுள்ள துணியை அகற்றக்கோரி, பெரியார் சிந்தனையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்தினர் பெரியார் சிலை மீது சுற்றப்பட்டிருந்த துணியை நீக்கினர்.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்