×

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

தேன்கனிக்கோட்டை, மார்ச் 11:  தேன்கனிக்கோட்டையில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தாசில்தார் அலுவலகம் முன் துவங்கிய பேரணியை, தளி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். தேன்கனிக்கோட்டை தாசில்தார் தண்டபாணி, மண்டல துணை தாசில்தார் பாலகிருஷ்ணன், வருவாய்துறை அதிகாரிகள், தேர்தல் துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர்கள், தொண்டு நிறுவன பெண்கள் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்றனர். பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு வாக்கு பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர், பொதுமக்கள் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags : Awareness Rally ,
× RELATED திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி