×

கம்பத்தில் குமார் ஓட்டல் புதிய கிளை திறப்பு

கம்பம், மார்ச் 11: கம்பம் நகரில் பிரபலமான ஓட்டல் குமார் மற்றும் ஆர்த்தி பேக்கரியின் புதிய கிளை வாகன நிறுத்த வசதியுடன் கம்பம்-குமுளி நெடுஞ்சாலையில், கம்பம் ஊராட்சி ஒன்றியம் எதிரே கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. கம்பம் முன்னாள் எம்எல்ஏ ஓ.ஆர்.இராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கம்பம் ஏவிஐ மேல்நிலைப்பள்ளி தாளாளர் திருமலை சந்திரசேகரன், குகன், உரிமையாளர்கள் கார்த்திகேயன், ராம்குமார் மற்றும் பாரத் கேஸ் லோகநாதன் உட்பட அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் ராஜேந்திரன் கூறுகையில், தற்போதைய புதிய கிளையில் அதே தரம், அதே சுவையுடன் உணவு வகைகள் மற்றும் புதிதாக பல தரப்பட்ட சிக்கன், சைனீஸ் உணவு வகைகள் வழங்கப்படுகிறது. இங்கு ஓட்டல், பேக்கரி மற்றும் மீட்டிங் ஹால் வசதியுடன் சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. குமாரின் தரமும், சுவையும் என்றும் மாறாது. வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

Tags : ஓட்டKumar Hotel ,Kambat ,
× RELATED கம்பத்தில் இருதய நோய்க்கான மருத்துவமனை திறப்பு