×

இலக்கிய மன்ற கூட்டம்

சிங்கம்புணரி, மார்ச் 11: சிங்கம்புணரியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் சிவப்பிரகாசம் வரவேற்றார்.
இதில் மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் த.பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேராசிரியர் சக்திவேல், சிவராமன் ஆகியோரால் கண்ணீர் துளி,  அகல்விளக்கு, கட்டமைப்பு தமிழ் மொழி கவசத்தை உடைக்காதே என்ற தலைப்புகளில் கவிதைகள் வாசிக்கப்பட்டது. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Literary Council Meeting ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது