×

திருப்பரங்குன்றம் கோயில் அருகே கஞ்சா விற்றவரிடம் 7 கிலோ பறிமுதல்

திருப்பரங்குன்றம், மார்ச் 11: மதுரை திருப்பரங்குன்றம்  கிரிவலப்பாதையில் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை தொடர்ந்து சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் கைப்பையில் 7 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அவரை திருப்பரங்குன்றம் காவல்நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் தேனி மாவட்டம், போடி வடக்குபட்டியை சேர்ந்த குமார் மகன் சஞ்சய்குமார்(20) என்பதும், அவர்  மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags : Thiruparankundram temple ,
× RELATED 6 மாதத்திற்கு பின் திருப்பரங்குன்றம்...