×

வாடிப்பட்டி அருகே பறக்கும் படை சோதனை தனியார் வங்கி ஊழியரிடம் 55 ஆயிரம் ரூபாய் பறிமுதல்

வாடிப்பட்டி, மார்ச் 11: வாடிப்பட்டி அருகே நகரி கிராமத்தில் உரிய ஆவணங்களின்றி வங்கி ஊழியர் கொண்டு சென்ற 55 ஆயிரத்து 900 ரூபாய் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
மதுரை சோழவந்தான் தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படை அதிகாரி வாசுகி தலைமையில் வாடிப்பட்டி அருகே நகரியில் வாகனத் தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டூவீலரை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் வந்த நபர் உரிய ஆவணங்களின்றி 55ஆயிரத்து 900 ரூபாய் ரொக்கப் பணம் வைத்திருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் அலங்காநல்லூர் அருகிலுள்ள அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பதும். தனியார் வங்கி ஊழியரான அவர், ஆவணங்களின்றி பணத்தை கொண்டு சென்றதும் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் சோழவந்தான் தொகுதி தேர்தல் அதிகாரி ஜஸ்டின் ஜெயபால், துணை தேர்தல் அதிகாரி பழனிக்குமார் ஆகியோர் வசம் ஒப்படைக்கப்பட்டு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

Tags : Vadippatti ,
× RELATED வாகனம் மோதி உயிரிழப்பைத் தடுக்க...