×

கொடைக்கானல் பூண்டியில் குடிநீர் விநியோக குளறுபடியை கண்டித்து போராட்டம்

கொடைக்கானல், மார்ச் 11: கொடைக்கானல் பூண்டியில் குடிநீர் விநியோக குளறுபடியை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் மேல்மலையில் உள்ளது பூண்டி கிராமம். இவ்வூரின் எம்ஜிஆர் காலனி, மேலூர், கீழூர் ஆகிய பகுதிகளின் குடிநீர், விவசாயத்திற்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வது பூண்டி ஏரி ஆகும். இதில் எம்ஜிஆர் காலனி பகுதிக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யாமல் குளறுபடி செய்து வருவதாக தெரிகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்டோர் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் பூண்டி ஏரியில் போதிய குடிநீர் இருந்தும் விநியோகத்தில் குளறுபடி செய்வதாக கூறி நேற்று எம்ஜிஆர் காலனி பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பூண்டி ஏரியில் போதிய குடிநீர் இருப்பு இருந்தும் அதிகாரிகள், விநியோகத்தில் மட்டும் குளறுபடி செய்கின்றனர். விரைவில் குடிநீர் விநியோகம் சீராகவில்லையென்றால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபட வேண்டியதிருக்கும்’ என்றனர்.

Tags : Kodaikanal Poondi ,
× RELATED கொடைக்கானல் மேல்மலை பகுதியில் போதை காளான்கள் வைத்திருந்தவர்கள் கைது