×

ெதன்காசியில் தொழிலதிபருக்கு மிரட்டல்

தென்காசி, மார்ச் 10:   தென்காசி அடுத்த குத்துக்கல்வலசையைச் சேர்ந்தவர் ஜான்சன். தொழிலதிபரான இவர், கணக்கப்பிள்ளை வலசையில் உள்ள தனது குடோனுக்கு அடிக்கடி சென்றுவருவது வழக்கம். இந்நிலையில் நேற்று குத்துக்கல்வலசை ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்று கொண்டிருந்த ஜான்சனை, இளம்பெண்ணும், வாலிபர் ஒருவரும் சேர்ந்து வழிமறித்து தரக்குறைவாக திட்டியதோடு மிரட்டலும் விடுத்தனராம். இதுகுறித்த புகாரின் பேரில் தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் நடத்திய விசாரணையில், அவர்கள் மஞ்சுளா, வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்குப்  பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Tenkasi ,
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...