×

கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுரை அரவக்குறிச்சி அருகே மொபட் மீது கார் மோதி தொழிலாளி பரிதாப பலி

அரவக்குறிச்சி, மார்ச் 10: அரவக்குறிச்சியை அடுத்த இந்திராநகர் அருகே மொபட்டில் சாலையை கடக்கும் போது கார் மோதி கூலி தொழிலாளி பலியானார்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா திருக்கூர்ணம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தன்(52), கூலி தொழிலாளி. இவர் தனது மொபட்டில் அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டிக்கு கூலி வேலைக்கு சென்றுவிட்டு, தனது ஊருக்கு செல்வதற்காகபள்ளப்பட்டி இந்திரா நகர் அருகே கரூர்-திண்டுக்கல் நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது கரூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் மொபட் மீது மோதியதில் பலத்த காயமடைந்து முத்தன் சம்பவ இடத்திலேயே பலியானார்.இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Aravakurichi ,
× RELATED வாக்குப்பதிவு முடிந்து விட்டதால்...