×

குளித்தலை தாலுகா அலுவலகம் முன் இடையூறாக இருந்த வாகனங்கள் அகற்றம்

குளித்தலை, மார்ச் 10: குளித்தலை தாலுகா அலுவலக வளாகத்தில் தாசில்தார் அலுவலகம், கிளை சிறைச்சாலை கருவூலம், இ சேவை மையம், பொதுப்பணித்துறை அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளது. இதனால் தினந்தோறும் அலுவலகத்திற்கு உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் வாகனத்திலும் இருசக்கர வாகனத்தில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக வருவாய்த்துறை அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் பல மாதங்களாக தாலுகா அலுவலகம் முன் நிறுத்தப்பட்டிருக்கிறது.

இதனால் அவசர நிமித்தமாக வாகனத்தில் வருபவர்கள் வாகனத்தை நிறுத்த மிகவும் சிரமமாக இருந்தது. மேலும் இம்மாதம் தேர்தல் பணி தொடங்கி குளித்தலை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து தேர்தல் அலுவலர்களும்இந்த அலுவலகத்திற்கு தான் வரவேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த தாலுகா அலுவலகத்தில் இருந்துதான் வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்துவருகிறது அப்பொழுது இடையூறாக இருக்கும் வாகனத்தினால் வாக்குப் பெட்டி இயந்திரங்கள் எடுத்து செல்லும் பணிகளுக்கும் இடையூறாக இருக்கும். தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை செய்துவரும் மாற்றுத்திறனாளிகள் கடைகள் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் தாலுகா அலுவலகம் முன் உள்ள பறிமுதல் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதுகுறித்த செய்தி படத்துடன் கடந்த மாதம் தினகரனில் வெளியானது. இதன் எதிரொலியாக தாலுகா அலுவலகம் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த தாசில்தாருக்கும், தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags : Kulithalai taluka ,
× RELATED குளித்தலை தாலுகா அலுவலகம் முன் இடையூறாக இருந்த வாகனங்கள் அகற்றம்