×

கணவர் உட்பட 4 பேர் மீது புகார் தரங்கம்பாடி அருகே வீடு புகுந்து துணிகரம் மீனவரின் மனைவியை தாக்கி 6 பவுன் தாலி செயின் பறிப்பு

தரங்கம்பாடி, மார்ச் 10: தரங்கம்பாடி அருகே வீடு புகுந்து மீனவரின் மனைவியை தாக்கி 6 பவுன் தாலி செயினை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சின்னங்குடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ். மீனவரான இவர் சுனாமி தெற்கு தெருவில் வசித்து வருகிறார். இவரது மனைவி செந்தமிழ்செல்வி. நேற்று முன்தினம் சத்தியராஜ் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுவிட்டார்.

அப்போது தனியாக இருந்த செந்தமிழ்செல்வி, வீட்டின் பின்புறம் உள்ள அறையில் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், கட்டையால் செந்தமிழ்செல்வியை தாக்கி அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயினை பறித்து சென்றுவிட்டார்.இதுகுறித்து செந்தமிழ்செல்வி அளித்த புகாரின்பேரில் பொறையார் போலீஸ் எஸ்ஐ கண்ணன், சிறப்பு எஸ்ஐ முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிந்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

Tags : Tharangambadi ,
× RELATED பறக்கும் படை சோதனையில் சிக்கிய ₹3.31...