×

தொடரும் விபத்துகளால் வாகனஓட்டிகள் அச்சம் பாராளுமன்றம் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்த வேண்டும்

மன்னார்குடி, மார்ச் 10: பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக் கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் 67ம் ஆண்டு சர்வதேச மகளிர் தின விழா முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் பாஸ்கரவள்ளி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன் ஆகியோர் தலைமையில் மன்னார்குடியில் நடைபெற்றது.மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பூபதி, நகர செயலாளர் மீனா ம்பிகை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில துணை தலைவர் மாலா பாண்டியன் பங்கேற்று மகளிர்தின வரலாறு குறித்து பேசினார்.

விழாவில் கலந்து கொண்ட பெண்கள், பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்திட வேண்டும். பள்ளி, கல்லூரி உள்ளிட்டு பெண்கள் பணி செய்யும் இடங்களில், பொது இடங்களிலும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்திட வேண் டும்.குடும்ப வாழ்க்கை சீரழிவிற்கும், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வன்முறை சம்பவத்தில் ஈடுபடு காரணமாகவும் உள்ள மதுபான கடைகளை அகற்றி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், ஜாதி மறுப்பு திரு மணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பும், அரசு வேலை யும் வழங்கிட வேண்டு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags : Parliament ,
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...