×

பங்குனி பிரமோற்சவ 6ம்நாள் விழா மன்னை ராஜகோபாலசுவாமி கோயிலில் ராஜஅலங்காரத்தில் பெருமாள் சேவை

மன்னார்குடி, மார்ச் 10: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனி பிரமோற்சவ விழாவின் 6ம் நாளான நேற்று ராஜ அலங்காரத்தில் கண்ட பேரண்டபட்சி வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மன்னார்குடியில் தமிழகத்தில் புகழ் பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான ராஜகோபால சுவாமி கோயிலில் 18 நாள் பங்குனி பிரமோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பங்குனி பிரமோற்சவ பெருவிழாவின் 6ம் நாளான நேற்று உற்சவர் பெருமாள் பல்லக்கு சேவையில் கோயிலிருந்து புறப்பட்டு நான்கு வெளி ராஜவீதிகளின் வழியாக யானை வாகன மண்டபத்திற்கு வந்தடைந்தார். அங்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், பெருமாள் ராஜ அலங்காரத்தில் கண்ட பேரண்டபட்சி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



Tags : Panguni Pramorsava ,festival ,Mannai Rajagopalaswamy ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!