×

திருத்துறைப்பூண்டியில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

திருத்துறைப்பூண்டி,   மார்ச்10:   ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருத்துறைப்பூண்டியில் வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகதீசன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வாக்களிப்போம். ஜனநாயகம் காப்போம் என்று எழுதப்பட்ட பெயர் பலகையில் கையெழுத்திட்டனர்.


Tags : Voter Awareness Signature Movement ,Thiruthuraipoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் டூவீலரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது