கோவை, மார்ச். 10: கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரியையொட்டி “யக் ஷா” கலைத்திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 2ம் நாளான நேற்று பிரபல கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞர் சந்தீப் நாராயணனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞர் சந்திப் நாராயணன், சங்கீத் நாடக் அகாடமியின் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார், கலா ரத்னா, யுவ புரந்தர உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.