×

திராவிடர் கழகம் சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு

ஈரோடு, மார்ச் 10:   கோபி அடுத்துள்ள நம்பியூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா மற்றும் “திராவிடம் வெல்லும்” எனும் தலைப்பில் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழக செயலாளர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். நம்பியூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார், நம்பியூர் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் சண்முகசுந்தரம், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, நம்பியூர் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் அரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் திராவிடர் கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன் கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் தஞ்சை பெரியார் செல்வன் “திராவிடம் வெல்லும்” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். திராவிடர் கழக சட்டத்துறை பொறுப்பாளர் வழக்கறிஞர் நம்பியூர் சென்னியப்பன் தொடக்க உரையாற்றினார். இதில் தி.மு.க கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Dravidar Kazhagam ,
× RELATED நாகர்கோவிலில் திக கொடியேற்று விழா