×

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் லாரி மோதி வாலிபர் பரிதாப சாவு

மார்த்தாண்டம், மார்ச் 10: மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நேற்று காலை லாரி மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மார்த்தாண்டம் அருகே உள்ள மதிலகம் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவரது மகன் தீபக் (19). பம்மத்தில் உள்ள ஒரு டிக்கரிங் கடையில் வேலை செய்தார். வழக்கம் போல் நேற்று காலை வேலைக்கு பைக்கில் புறப்பட்டார். மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அவருக்கு முன்னால் 2 லாரிகள் சென்றுகொண்டிருந்தன.
ஒரு இடத்தில் முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல தீபக் முயன்றுள்ளார். அதே நேரத்தில் அந்த லாரியும் அதற்கு முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றது. இதில் அந்த லாரி பைக்கில் சென்ற தீபக் மீது உரசியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் லாரியில் சிக்கிக்கொண்டார். லாரி அவரை சிறிது தூரம் இழுத்து சென்றது. இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு டிரைவர் லாரியை நிறுத்தினார். ரத்த வெள்ளத்தில் விழுந்த தீபக் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதனால் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மார்த்தாண்டம் போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேம்பாலத்தில் சிசிடிவி
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தாலும், விபத்துகள் எப்படி நடந்தது. விபத்துக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் உள்ளது. எனவே விபத்துகள் நடக்காமல் தடுக்கவும், விபத்துகள் நேர்ந்தால் காரணமானவர்களை கண்டுபிடிக்கவும் மேம்பாலத்தில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Marthandam ,
× RELATED மார்த்தாண்டத்தில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு