×

சாத்தூர் அருகே குடோனில் பதுக்கிய ரூ.5.50 லட்சம் மதிப்பு புகையிலை பொருள் பறிமுதல்

சாத்தூர், மார்ச் 9: சாத்தூர் அருகே உள்ள ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(32). இவர் சாத்தூர் மார்க்கெட் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் அனுமதியின்றி புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சாத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் அம்மாபட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் ராமலிங்கபுரத்தில் உள்ள ராமகிருஷ்ணனின் குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு தமிழக அரசால் தடை செய்யபட்ட ரூ.5.50 மதிப்பிலான புகையிலை பொருட்களை  68 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குடோனில் பதுக்கி வைக்கபட்டிருந்த புகையிலை மூடைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து அம்மாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த ராமகிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Gudon ,Sattur ,
× RELATED 24,000 வேட்டி சேலைகள் பதுக்கல் அதிமுக...