×

குடிநீர் சீராக விநியோகிக்க கோரி விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா

விளாத்திகுளம்,மார்ச் 10: விளாத்திகுளம் பகுதியில் குடிநீர் சீராக விநியோகம் செய்ய கோரி பேரூராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விளாத்திகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு ராஜீவ் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், சீராக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தியும் ராஜீவ்நகர் பகுதி பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் சீராக விநியோகிக்க வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர். தொடர்ந்து அவர்கள் பேரூராட்சியில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். மனுவை ஏற்றுக்கொண்ட அலுவலர்கள், சீராக குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.

Tags : Dharna ,Vilathikulam Municipality ,
× RELATED இன்சூரன்ஸ் ஊழியர்கள் தர்ணா போராட்டம்