கேடிசி நகர், மார்ச் 10: நெல்லை திருமண்டல வடமேற்கு சபை மன்ற வேதநாயகம் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தாழையூத்தில் நடந்தது. லே செயலர் வேட்பாளர் வேதநாயகம் தலைமை வகித்தார். நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஆசிரியர் பொன்னு, சோலைசேரி செல்வின், ஆபிரகாம் கிறிஸ்டோபர், பிரிஸ்கில்லாள், பீட்டர்ஜான், கவுன்சில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் பொன்னுச்சாமி ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசினார்.
கூட்டத்தில் பெருமன்ற உறுப்பினர்கள் மணக்காடு ஜீவக்குமார், சாம்சன் பால்ராஜ், ஆலங்குளம் வக்கீல் நெல்சன், கரையிருப்பு ஜெயராஜ், குருமார்கள் சற்குணம், முத்துராஜ், ஜெபரத்தினம், டேவிட் அன்பு பிரபாகர், சாம்பிரகாஷ், வில்சன், செல்வன், ஆபிரகாம் செல்வராஜ், ஜெய்சிங் ஆபிரகாம் மற்றும் பெருமன்ற உறுப்பினர்கள், சர்ச் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.