×

அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் நெல்லையில் பட்டாசு வெடித்து தேமுதிகவினர் கொண்டாட்டம்

நெல்லை, மார்ச் 10: அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதாக விஜயகாந்த் அறிவித்ததை வரவேற்று நெல்லையில் தேமுதிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். சட்டமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் நேற்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியினர் நிறுவனர் விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுவதாக விஜயகாந்த் அறிவித்தார்.

விஜயகாந்த்தின் இந்த அறிவிப்பை வரவேற்று தமிழகம் முழுவதும் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர். நெல்லை சந்திப்பு பகுதியில் மாநில வர்த்தக அணி செயலாளர் முகம்மது அலி தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், ஆனந்தமணி, சுப்பிரமணி, அந்தோணி, ஜலீஸ்ரகுமான், மாரிமுத்து, பரணி செல்வராஜ், குருபாலன், வண்ணைராஜா, செல்வகணபதி ஆகியோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Nellai Nellai Nellai ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு