×

அஞ்செட்டி அருகே டூவீலர் மோதி தொழிலாளி பலி


தேன்கனிக்கோட்டை, மார்ச் 10: அஞ்செட்டி அடுத்த சேசுராஜபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி  ஆரோக்கியசாமி (50). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து  சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, பின்னால் வேகமக வந்த டூவீலர்  ஆரோக்கியசாமி மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த ஆரோக்கியசாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டூவீலரை ஓட்டிவந்த அதே ஊரை  சேர்ந்த விமல்ராஜ் (40) என்பவரும் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு  ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து தகவலரிந்து சம்பவ இடத்துக்கு வந்த அஞ்செட்டி போலீசார், ஆரோக்கியசாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Anchetti ,
× RELATED வத்தல்மலை அடிவாரத்தில்...