×

ஒட்டன்சத்திரத்தில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

ஒட்டன்சத்திரம், மார்ச் 9: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி ஒட்டன்சத்திரத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்காளிப்பதற்காக துணை ராணுவத்தினர், காவல் துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். டிஎஸ்பி வெள்ளைச்சாமி அணிவகுப்பை துவக்கி வைத்தார். செக்போஸ்டில் இருந்து துவங்கிய கொடி அணிவகுப்பு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது. இதில் டிஎஸ்பி அசோகன், இன்ஸ்பெக்டர் சீனிவாசன், எஸ்ஐ கணேசன் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ottanchattaram ,
× RELATED தூய்மை நகராட்சியாக ஒட்டன்சத்திரம் தேர்வு: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்