×

அரசு பஸ்சை சிறைபிடித்த மக்கள் ஒட்டன்சத்திரம் அருகே பரபரப்பு

ஒட்டன்சத்திரம், மார்ச் 9: ஒட்டன்சத்திரம் அருகே முறையாக இயக்க கோரி அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம் அருகே மலைக்கிராமங்களான வடகாடு, வண்டிப்பாதை, பால்கடை வழியாக வத்தலக்குண்டு, கொடைக்கானல் பகுதிக்கு தினசரி அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பால்கடை பகுதியில் வத்தலக்குண்டு கிளையை சேர்ந்த அரசு பஸ்கள் மெதுவாக ஊர்ந்து கொண்டே பயணிகளை ஏற்றி செல்கிறது. இதனால் பயணிகள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் டிரைவர், கண்டக்டரிடம் பலமுறை புகார் கூறியும் இந்நிகழ்வு தொடர்ந்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் நேற்று பால்கடை வந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர். பின்னர் டிரைவர், கண்டக்டர் இனி முறையாக பஸ்களை இயக்குகிறோம் என கூறினர். அதன்பிறகே மக்கள் பஸ்சை விடுவித்தனர். இச்சம்பவத்தால் அங்கு சுமார் 1 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Ottanchattiram ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே பரபரப்பு திமுக...