×

அயோத்தியாப்பட்டணம் அருகே கொரோனா தடுப்பூசி போட குவிந்த மக்கள்

அயோத்தியாப்பட்டணம், மார்ச் 9:  தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அயோத்தியாப்பட்டணம் அடுத்த குள்ளம்பட்டியில் பெண்கள், முதியோர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்தனர். இதில் பொதுமக்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு பரிசோதனை செய்யப்பட்டு சீராக உள்ளவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன், எழிலரசி, சுகாதார ஆய்வாளர்கள் மாதேஸ்வரன், கிரிதரன், கிராம சுகாதார செவிலியர் புஷ்பலதா, ஊராட்சி மன்ற தலைவர் கலாபிரியா பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், அயோத்தியாப்பட்டணம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது.

Tags : Ayodhya ,
× RELATED கம்பராமாயண நுணுக்கங்கள்