×

கல்லணை கால்வாய் வாய்க்கால்கள் முன்கூட்டியே தூர்வாரி பராமரிக்கப்படுமா? அரிமளம் அருகே கே.புதுப்பட்டியில் துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு

திருமயம், மார்ச் 9: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அரிமளம் அருகே துணை ராணுவ கொடி அணிவகுப்பை ஏடிஎஸ்பி கீதா தொடங்கி வைத்தார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்காக மாவட்டம் முழுவதும் அரசு அதிகாரிகள் துணையோடு பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரி நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக நேற்று அரிமளம் அருகே உள்ள கே.புதுப்பட்டி கடைவீதி பகுதியில் பொதுமக்களிடத்தில் சட்டமன்றத் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணை ராணுவ கொடி அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. முன்னதாக ஏடிஎஸ்பி கீதா ராணுவ அணிவகுப்பை கொடியசைத்து துவங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் கே புதுப்பட்டி கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பு உடன் சென்று அப்பகுதி மக்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த அணிவகுப்பில் பொன்னமராவதி டிஎஸ்பி செங்கமல கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : K. Pudupatti ,Arimalam ,
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...