×

3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

நாகை, மார்ச் 9: நாகையில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் பிரவீன்பிநாயர் ஆய்வு செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 2ம் தேதி எண்ணப்படுகிறது. நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் நாகையில் உள்ள இஜிஎஸ் பிள்ளை கல்லூரியிலும், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியிலும் எண்ணப்படுகிறது.

இவ்வாறு நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் மையான இஜிஎஸ் பிள்ளை கல்லூரியை கலெக்டர் பிரவீன்பிநாயர் ஆய்வு செய்தார். அப்போது வாக்கு எண்ணும் மையத்துக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா, எந்த அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பது, எந்த அறையில் வாக்குகள் எண்ணும் பணியை மேற்கொள்வது என்பது குறித்து ஆய்வு செய்தார். எஸ்பி ஓம்பிரகாஷ்மீனா, டிஆர்ஓ இந்திமதி உடனிருந்தனர்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...