வேதாரண்யம், மார்ச் 9: வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தேர்தல் அலுவலரான ஆர்டிஓ துரைமுருகன் தலைமை வகித்தார். தாசில்தார் ரமாதேவி, டிஎஸ்பி மகாதேவன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். அதிமுக ஒன்றிய செயலாளர் கிரிதரன், திமுக மாவட்ட வக்கீல் பிரிவு பொறுப்பாளர் அன்பரசு, பாஜ மாவட்ட செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட பல்வேறு
கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பு, தபால் ஓட்டுகள் பதிவு, தேர்தல் விளம்பர இடம், பிரசார நேரம் உட்பட தேர்தல் விதிகள் குறித்து விளக்கி பேசினார்.