×

பாதாள சாக்கடை உடைப்பு காந்திகிராமம் பூங்காவில் கழிவுநீரால் துர்நாற்றம்


கரூர், மார்ச் 9: கரூர் தெற்கு காந்திகிராமம் பகுதியில் உள்ள பூங்கா வளாகத்தில் பாதாள சாக்கடை உடைப்பு காரணமாக கழிவு நீர் வெளியேறி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட தெற்கு காந்திகிராமம் பகுதியின் மையத்தில் பூங்கா வளாகம் உள்ளது. இந்த பகுதியினர் பயன்படுத்தும் வகையில் இவை அமைத்து தரப்பட்டுள்ளது. இந்நிலையில், பூங்காவின் நுழைவு பாதையின் அருகே பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கசிந்து பூங்கா முழுதும் பரவியுள்ளது. இதன் காரணமாக பகுதி முழுதும் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பூங்கா வளாகம் சீரமைக்கப்படாமல் தற்போதுதான் ஓரளவு சுத்தம் செய்யப்பட்டுள்ளதால சிறுவர், சிறுமிகள் ஏராளமானோர் பூங்கா பகுதிக்கு சென்று விளையாடி வருகின்றனர். எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும். பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த பூங்கா வளாகத்தை முழுவதும் சீரமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Gandhigram Park ,
× RELATED கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்...