கரூர், மார்ச் 9: கரூர் மாவட்ட திமுக சார்பில் கிழக்கு ஒன்றிய திமுக அலுவலக திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி கலந்து கொண்டு கிழக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். இதே போல், கரூர் கோவை சாலையில் உள்ள தங்கவேல் நகரில், தாந்தோணி மேற்கு ஒன்றிய அலுவலக திறப்பு விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில், மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணிமணி, கரூர் ஒன்றிய செயலாளர் கந்தசாமி உட்பட அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர.