×

டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக செங்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை, மார்ச் 9: டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக செங்கோட்டையில் விவசாயிகள் கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விரோத சட்டங்களை வாபஸ் வாங்க வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் கடந்த 100 நாட்கள் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அதற்கு ஆதரவாக  செங்கோட்டையில் நடந்த விவசாய சங்க போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தாலுகா செயலாளர் பரமசிவன், சுந்தர் தலைமை வகித்தனர். போராட்டத்தை மாவட்ட செயலாளர் கண்ணன் துவக்கி  வைத்து பேசினார். தம்பித்துரை முடித்துவைத்து பேசினார். போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் வேலுமயில், மாதர் சங்கம் ஆயிஷா, மல்லிகா, விதொச சார்பில் சின்னசாமி, முருகேசன், தமுஎகச சார்பில் பால்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாரியப்பன், சாமி, மற்றும் தென்காசி விவசாயிகள் சங்க தலைவர் திருமலைகுமாரசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : Red Fort ,Delhi ,
× RELATED செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில்...