×

வீரபாண்டியில் இளைஞர் பெருமன்றம் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, மார்ச் 9: தேனி அருகே வீரபாண்டியில் கட்டாயப்படுத்தி நிதி வசூல் செய்வதாக தனியார் கல்லூரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி அருகே வீரபாண்டியில் உள்ள தனியார் கலைக்கல்லூரி முன்பாக அகில இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழ் பெருமாள் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் கட்டாயப்படுத்தி கல்லூரி நிர்வாகம் நிதி வசூல் செய்வதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் சரவணபுதியவன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மகேந்திரன், ரமேஷ், வீரையா, ராஜாராம் மற்றும்  திரளானோர் கலந்து கொண்டனர்.


Tags : Youth Congress ,Veerapandi ,
× RELATED முத்துப்பேட்டை அருகே...