×

மேலூர் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாப பலி

மேலூர், மார்ச் 9: மேலூர் அருகே உள்ள அம்பலகாரன்பட்டியை சேர்ந்த சின்னையா, கூலி தொழிலாளி. இவர், கருங்காலக்குடியில் நேற்று வேலையை முடித்துவிட்டு, டூவீலரில் நான்குவழிச்சாலையில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். குன்னாரம்பட்டி விலக்கு அருகே, பின்னால் வந்த மற்றொரு டூவீலர், அவரது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சின்னையா, மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.  கொட்டாம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Melur ,
× RELATED தனுஷுக்கு எதிரான மனு தள்ளுபடி