×

விளாத்திகுளத்தில் துணை ராணுவ படை போலீசார் கொடிஅணிவகுப்பு

விளாத்திகுளம், மார்ச் 8: விளாத்திகுளத்தில் துணை ராணுவ படை, போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் தொகுதிக்குரிய எல்கைகள் மற்றும் விளாத்திகுளம் தொகுதிக்கு அருகே உள்ள விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட நுழைவு எல்கை பகுதிகளில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து துணை ரானுவத்தினருடன் இணைந்து வாகன தணிக்கை நடத்தி வருகின்றனர்.

 இதனிடையே பொதுத்தேர்தலில் அச்சமின்றி அனைவரும் வாக்குப்பதிவு செய்யவும், பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் விளாத்திகுளத்தில் போலீசார் மற்றும் துணை ரானுவத்தினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. தூத்துக்குடி டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமை வகித்தார். விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். நகரின் முக்கிய பகுதிகள் வழியாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. மேலும் இதில் விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Tags : Army Police ,Vilathikulam ,
× RELATED விளாத்திகுளம் அரசு கல்லூரியில்...