×

செய்துங்கநல்லூர் பகுதியில் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடு

செய்துங்கநல்லூர், மார்ச் 8: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டுமுறப்பநாடு, செய்துங்கநல்லூர் மற்றும் சேரகுளம் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். முறப்பநாடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தாலக்குறிச்சி, விட்டிலாபுரம், கருங்குளம், கால்வாய் மற்றும் சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்குகாரசேரி ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்  நேரில் சென்று ஆய்வு செய்து, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் அப்பகுதிகளில் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தகுந்த அறிவுரை வழங்கினார்.

ஆய்வின்போது முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் ராஜாராபர்ட், செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாசுந்தர், உதவி ஆய்வாளர்கள் முகம்மது பைசல், அந்தோணி திலிப், கருப்பையா, சேரகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அல்லிஅரசன் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

Tags : Cheytunkanallur ,
× RELATED செய்துங்கநல்லூர் அருகே 36 கிலோ...