×

உடன்குடியில் மரக்கன்று நடும்விழா

உடன்குடி,மார்ச் 8: உடன்குடி பெருமாள்புரத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது. திருவள்ளுவர் நற்பணி மன்றம் சார்பில் அந்த பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தை சுற்றி மன்ற உறுப்பினர்கள் ஏராளமான மரக்கன்றுகளை நட்டனர். மேலும் விளையாட்டு மைதானத்தை பசுமை மைதானமாக மாற்றுவதற்காக மரங்களை நடுவதாகவும், தினசரி மரங்களை பராமரித்து, இயற்கை உரங்களை வைத்து மரங்களை வளர்த்து வருவதாகவும் நற்பணி மன்ற நிர்வாகிகள் கூறினர்.

Tags : Udankudi ,
× RELATED ஐஸ்கிரீம் கொடுத்து குழந்தை கடத்தல்