×

மாவட்டத்தில் இன்று 333 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 8: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (8ம்தேதி) 333 கிராம ஊராட்சிகளிலும் மகளிர் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளிலும் இன்று (8ம்தேதி) காலை 11 மணியளவில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், மகளிருக்கு சம உரிமை அளித்தல் மற்றும் மகளிர் உரிமையை மீட்டெடுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தெரிவிக்கப்படுகிறது. கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்து கொள்ள, அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. சிறப்பு கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது