×

திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகனுக்கு அஞ்சலி

கிருஷ்ணகிரி, மார்ச் 8: கிருஷ்ணகிரியில் நகர திமுக சார்பில், மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர திமுக செயலாளர் நவாப் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். இதில் தர்மன், கடலரசுமூர்த்தி, திருமலைச்செல்வன், பொன்.குணசேகரன், மதிவாணன், மாதவன், ஆட்டோ மோகன், கனல் சுப்பிரமணி, வாழை ரவி, ஷாஜகான், துரை உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். போச்சம்பள்ளி:போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில், முன்னாள் ஊராட்சி தலைவர் அர்ஜூனன், நேதாஜி, கவுதம், அருள், மதிகுமரன், இளையராஜா, சக்தி, மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அன்பழகனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

சந்தூர் சாலையில் உள்ள திமுக அலுவலகத்தில் டாக்டர் தென்னரசு தலைமையில் சரவணன், சென்னகிருஷ்ணன், ராஜூ, சுதாகர், இன்பநாதன், கீர்த்திவாசன், பெருமாள், சின்னதம்பி, சேகர், அழகேசன், தருமன், குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர். புலியூரில், மாவட்ட இலக்கிய அணி முன்னாள் மாவட்ட தலைவர் புலவர் கிருஷ்ணன் தலைமையில் சக்தி, மகேந்திரன், சேகர், சுப்பு, வெற்றி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அன்பழகன் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

ேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில், பேராசிரியர் அன்பழகனின் உருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பேரூர் அவைத்தலைவர் வெங்கடசாமி, துணை செயலாளர் சக்திவேல், நாகராஜ், மோகன், பிதிரெட்டி, முஜாமில்பாஷா, கிருஷ்ணன், ரமேஷ், மணிவண்ணன், எல்லப்பன், அண்ணாதுரை, ஸ்ரீதர், ராமன், லிங்கோஜிராவ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அஞ்செட்டியில் ஒன்றிய பொறுப்பாளர் நாகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் காதர்பாஷா, ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டு அன்பழகனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் பேரூர் திமுக சார்பில், பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு மாவட்ட துணை செயலாளர் நாகராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், பாபு, தேங்காய் சுப்பிரமணி, விஸ்வபாரதி, விவேகானந்தன், செந்தில்குமார், சாஜித், அரிநாராயணன், மணிகண்டன், இளங்கோவன், சென்னகேசவன், ஷாபுதீன், ஜெய்சங்கர், சத்தி, சின்னராஜ், ஸ்ரீதர் ஹர்ஷவர்தன், அன்சர்பாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

ஓசூர்: மாநில சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை செயலாளர் விஜயகுமார் தலைமையில், நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு,பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முரளி, எல்பிஎப் மனோகரன், பார்த்திபன், முனிராஜ், நாராயணப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திராவிடர் கழகம் சார்பில், பெரியார் சர்க்கிள் பகுதியில் மாநகர தலைவர் மணி தலைமையில், பேராசிரியர்அன்பழகன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் வனவேந்தன், சின்னசாமி, துக்காராம், செல்வம், சிவந்தி அருணாச்சலம், செல்வி, செந்தமிழ் பகுத்தறிவு, திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஹோஸ்டிய ஞானசேகரன், பாலகிருஷ்ணன், லட்சுமிகாந்தன், ரமேஸ்வரன், ஜெயசந்தர், பிரகாஷ், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன், வித்யூ அறக்கட்டளை செயற்பாட்டாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சூளகிரி:சூளகிரி ரவுண்டானாவில், சூளகிரி திமுக தெற்கு ஒன்றியம் சார்பில், மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் ஷேக் ரஷீத் தலைமையில், பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், வெங்கடேஷ், முனி வெங்கட்டப்பன், ஜீயா உல்லா, முனிசந்திரன், சுரேஷ், அன்புசேகரன், மோகனசுந்தரம், மாரிமுத்து, சந்திரப்பா, ராமசந்திரன், நடேசன் கலந்து கொண்டனர்.

Tags : Prof. ,Anpalagan ,DMK ,
× RELATED கவுன்சலிங் ரூம்