×

திருச்சுழியில் வாக்களிப்பது குறித்து நூதனமான பிரசாரம்

திருச்சுழி, மார்ச் 8: திருச்சுழி வட்டாட்சியர் தலைமையில் கோயிலுக்கு வந்த பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து நூதன முறையில் வருவாய்த்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வருவாய் துறையினர் பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையிலான வருவாய் துறையினர் பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கோப்பைகளில் பிரசாதம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் சிவனாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tiruchirappalli ,
× RELATED பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.....