×

தேர்தல் பணியில் ஈடுபடக்கோரி மாஜி ராணுவத்தினருக்கு அழைப்பு

போடி, மார் 8: போடி பஸ்நிலையம் அருகில், முன்னாள் ராணுவத்தினர் சங்கம் உள்ளது. இதில், போடி பகுதியைச் சேர்ந்த மாஜி ராணுவத்தினர் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடப்பதையொட்டி பாதுகாப்பு பணியில் போலீசாருடன் மாஜி ராணுவத்தினரும் ஈடுபட வேண்டும் என போடி டிஎஸ்பி பார்த்திபன் ராணுவத்தினரின் சங்கத்திற்கு சென்று நேரில் அழைப்பு விடுத்தார். அப்போது முன்னாள் ராணுவ வீரர்கள்  பார்த்திபனை வரவேற்று சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையேற்ற டிஎஸ்பி, ‘சட்டமன்ற தேர்தலின்போது போலீசாருடன் சேர்ந்து, மாஜி ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு மாஜி ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக சம்மதம் தெரிவித்தனர்.

Tags : Maji Army ,
× RELATED போலி துப்பாக்கி, போலி லைசென்ஸ்...