×

செல்லம்பட்டியில் நாட்டுப்புற கலைஞர்கள் விழிப்புணர்வு பிரசாரம்

உசிலம்பட்டி, மார்ச் 8: உசிலம்பட்டி தாலுகா, செல்லம்பட்டி ஒன்றியத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். நேற்று செல்லம்பட்டி, கருமாத்தூர் பகுதிகளில் உசிலம்பட்டி தாசில்தார் விஜயலட்சுமி தலைமையில் கிராமிய கலைஞர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். அதில் 100 சதவீதம் வாக்களிக்க கோரியும், ஓட்டுக்கு பணம் வாங்காமலும், தேர்தல் நாளில் தவறாது வாக்களிக்க வேண்டும், பொதுமக்கள் அச்சப்படாமல் வாக்களிக்கலாம், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று பிரசாரம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Sellampatti ,
× RELATED செல்லம்பட்டியில் நூல் வெளியீட்டு விழா