- தவேகா
- திமுகா
- மு. கே. ஸ்டாலின்
- சென்னை
- மகளிர் பெண்கள்
- சந்தித்தல்
- அண்ணா என்டவலயா
- ஜனாதிபதி
- குடியரசு
- ஆர்மீனியா
- கே. ஸ்டாலின்
சென்னை: தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம் என அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள். தவெக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் பெருகிவிட்டன. தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் வருந்துகின்றனர். திமுக பெற்ற வாக்குகளுக்கு மகளிரணியும் முக்கிய காரணம். திமுக ஆளுங்கட்சியாக மாற வேண்டும் என்றால் இன்னும் சுறுசுறுப்பாக வேகமாக செயல்பட வேண்டும். ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண்ணுக்கே பாலியல் கொடுமை நடந்துள்ளது.
விஜய் ஆட்சி மீது விஜய்க்கே நம்பிக்கை இல்லையா? அதிமுக எம்எல்ஏக்களை ஷாப்பிங் செய்கிறார் முதலமைச்சர் விஜய். தவெகவினரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று மக்கள் கேட்கும் நிலை வந்துவிட்டது. பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களில் தவெகவினர் தான் ஈடுபடுவதாக செய்திகள் வருகின்றன. பாஜக மற்ற மாநிலங்களில் செய்வதை இங்கு விஜய் செய்கிறார். ஒரே மாதத்தில் கேலிக்கூத்தான, அசிங்கமான ஆட்சியாக தவெக ஆட்சி மாறியுள்ளது. கான்பிடன்டாக இருங்க என்ற விஜயே நம்பிக்கையுடன் இல்லை. தீர்ந்துபோன சக்தி என்று சொன்ன கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களையே திருடுகிறார் விஜய்.
திமுக ஆட்சியில் மக்களுக்கு பார்த்து பார்த்து திட்டங்களை செய்துக் கொடுத்தோம். தவெக ஆட்சியில் நாள்தோறும் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன. பாலியல் வன்முறை, அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு நடக்கும்போது விமர்சிக்காமல் இருக்க முடியுமா?. நான் நிதிஆயோக் கூட்டத்துக்கு சென்றபோது ED வழக்கில் தப்பிக்க சென்றேன் என்றார் விஜய். பாஜகவை உறுதியாக விமர்சித்தால் ஆட்சிக்கு ஆபத்து வரும் என அமைதியாக இருக்கிறீர்களா?. நிதி ஆயோக் கூட்டத்தில் திமுகவின் சாதனைகள், திமுக முன்வைத்த கோரிக்கைகளை பேசியுள்ளார் விஜய். இது சினிமா அல்ல, ஆட்சி நிர்வாகம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
