×

திருமயத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

திருமயம், மார்ச் 6: திருமயத்தில் நேற்று நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்தமாதம் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மக்களிடையே தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி வட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நடந்தது. பேரணி தாலுகா அலுவலகத்தில் துவங்கி திருமயம் பஸ் ஸ்டாண்ட், ஸ்டேட் பாங்க்சாலை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக சென்று மீண்டும் தாலுகா அலுவலகம் வந்தடைந்தது.

பேரணியில் துணைவட்டாட்சியர் சாமிநாதன், திருமயம். வருவாய்அலுவலர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீஸ்வரன் மற்றும் அனைத்து வருவாய் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர். பேரணியின்போது பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து கோஷம் எழுப்பினர்.

Tags : Voter Awareness Rally ,Thirumayam ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி