×

தேர்தல் விதிமுறை மீறி போஸ்டர் ஒட்டிய விசி நிர்வாகிகள் மீது வழக்கு

சீர்காழி, மார்ச் 7: தேர்தல் விதிமுறை மீறி போஸ்டர் ஒட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற தொகுதி ஆய்வு கூட்டம் நடைபெறுவது தொடர்பாக போஸ்டர் ஒட்டியிருந்தனர். இதைதொடர்ந்து சீர்காழி போலீசில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், சீர்காழி தொகுதி செயலாளர் தாமு இனியவன் ஆகியோர் மீது தேர்தல் பறக்கும் படை அலுவலர் மணிகண்டன் புகார் செய்தார். அதன்பேரில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : VC ,
× RELATED தொகுதிப் பங்கீடு குறித்து திமுக –...