மயிலாடுதுறை, மார்ச் 7: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து பிரசார இயக்கம் நடந்தது. நாகை மாவட்ட மகளிர் திட்ட உதவி அலுவலர் மைக்கேல்ராஜ் முன்னிலை வகித்தார். குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி செயல்அலுவலர் பாரதிதாசன் தலைமை வகித்து விழிப்புணர்வு இயக்கத்தை துவக்கி வைத்தார். பேரூராட்சி இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம், துப்புரவு ஆய்வாளர் இளங்கோ, குத்தாலம் பேரூராட்சி சமுதாய அமைப்பாளர் சத்யா, குத்தாலம் வட்டார அலுவலர் மாதரசி மற்றும் பலர் பங்கேற்றனர்.