சென்னை: ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகைக்கு நடந்த அநீதி தமிழக பெண்களை கொதிப்படைய செய்துள்ளது என எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார் . உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். வேலை வாங்கித்தருவதாகக் கூறி பெண்ணை காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்எல்ஏ சரவணன் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
