×

காரியாபட்டியில் துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு

காரியாபட்டி, மார்ச் 7: காரியாபட்டியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க உறுதி செய்யும் வகையில் துணை ராணுவப்படை மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன. இந்த தேர்தலில் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் மாநில முழுவதும் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். இதனடிப்படையில், காரியாபட்டியில் ஏடிஎஸ்பி மணிவண்ணன் மற்றும் அருப்புக்கோட்டை டிஎஸ்பி சகாயஜோஸ் ஆகியோர் தலைமையில், கொடி அணிவகுப்பு நடந்தது. காரியாபட்டி அமலா பள்ளி முன்பு ஏ.டி.எஸ்.பி மணிவண்ணன் அணிவகுப்பை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், துணை ராணுவப்படை மற்றும் போலீசார் சுமார் 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் சென்றனர். இந்த அணிவகுப்பு முக்குரோடு, பேருந்துநிலையம், மெயின் ரோடு வழியாக சென்று காவல் நிலையத்தில் நிறைவு பெற்றது.

Tags : Army ,Kariyapatti ,
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...