×

பெரியகுளம் தொகுதியில் பிரசாரம் செய்வதற்கு 10 இடங்கள் தேர்வு டிஎஸ்பி தகவல்

பெரியகுளம், மார்ச் 7:   தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறை படுத்தி வருகின்றது. இந்நிலையில்  பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேனி ஏடிஎஸ்பி சங்கரன் தலைமை வகித்தார். பெரியகுளம் டிஎஸ்பி முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் சுகுமாறன், திமுக நகர செயலாளர் முரளி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பெரியகுளம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தமிழ்வாணன் உட்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள், காவல்துறையினர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய டிஎஸ்பி முத்துக்குமார் கூறுகையில், ``பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்ய, பொதுக்கூட்டங்கள் நடத்திட 10 இடங்களை காவல்துறையினர் தேர்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், பிரசாரம் நடத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க தேர்தலை அமைதியாக நடத்திட வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.

Tags : Periyakulam ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி