காத்மாண்டு: பூச்சிகொல்லி மருந்து தெளிப்பதாக புகாரை அடுத்து இந்திய மாம்பழங்களுக்கு நேபாளம் தடை விதித்துள்ளது. இந்திய மாம்பழங்களுக்கு அதிகப்படியான பூச்சிகொல்லி தெளிக்கப்பட்டிருப்பதாக கூறி நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மாம்பழங்களுக்கு தடை விதித்துள்ளதால் நேபாளத்தில் வரத்து குறைவால் மாம்பழங்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டது. நேபாளத்தின் தேவைக்கு உள்நாட்டு மாம்பழங்கள் மட்டும் போதாது என்ற நிலை உள்ளபோது வரத்து குறைவால் விலை உயர வாய்ப்புள்ளது.
